Image Courtesy : AFP  
பிற விளையாட்டு

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் சர்வதேச போட்டிகளில் விளையாட இடைக்கால தடை

டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கசிந்த இ-மெயிலில், அவரது சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் பாதகமான முடிவுகள் வந்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

ஊக்கமருந்து பரிசோதனையை எதிர்த்து வீராங்கனை டூட்டி சந்த் மேல்முறையீடு செய்துள்ளார். பரிசோதனை அறிக்கை போலி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் அறிவிப்பு தனக்கு வரவில்லை என்று கூறிய டூட்டி சந்த், தான் நீண்ட காலமாக சர்வதேச அளவில் போட்டியிடுவதாகவும், தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு