Image Courtesy: PTI  
பிற விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் ஐதராபாத்தை சேர்ந்த 31 வயதான சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான சாய் பிரனீத், 2019-ம் ஆண்டில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்க இருக்கும் சாய் பிரனீத், அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்