பிற விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

பாலி,

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியுடன் மோதினார்.

1 மணி 10 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 17-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் ஒஹோரியை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான எச்.எஸ். பிரனாயை சாய்த்து 2-வது சுற்றை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-18 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் போபோவை வீழ்த்தினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு