பிற விளையாட்டு

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா வெற்றி பெற்றார்.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா (சென்னை) 8-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-8, 11-9, 7-11, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் மின்னா வாலிட்டை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் அபய் சிங் 11-7, 3-11, 11-6, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த வேலவன் செந்தில்குமாரை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து