பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதி ஆட்டம் கோவாவில் நடைபெற உள்ளது

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கோவாவில் (மார்ச்14-ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி



* ஜிம்பாப்வே- வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை பிடித்த வங்காளதேச அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் மொமினுல் ஹக் (79 ரன், நாட்-அவுட்), நஜ்முல் ஹூசைன் (71 ரன்) அரைசதம் அடித்தனர்.

* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடரில் நேற்றிரவு புவனேசுவரத்தில் அரங்கேறிய ஒடிசா எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி இருந்த நிலையில் கடைசி 8 நிமிடங்களில் கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பையும் கோலாக்கியதால் தோல்வியில் இருந்து தப்பியது. நாளை நடக்கும் கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கோவாவில் (மார்ச்14-ந்தேதி) நடைபெறும் என்று போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறியுள்ளார். ஐ.பி.எல்.-ல் விளையாடும் இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுடன் பழகுவதன் மூலம் நெருக்கடியை சமாளிப்பது உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து