கோப்புப்படம்  
பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் கண்டா சுனேயாமா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானின் கண்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு