பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்குள் பி.வி.சிந்து நுழைந்தார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பி.வி.சிந்து வெற்றி

இந்நிலையில், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் சின் யுபியை இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் சின் யுபியை 21-19,15-10 என்ற செட்களில் வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்குள் பி.வி.சிந்து நுழைந்தார்.