பிற விளையாட்டு

கபடி மாஸ்டர்ஸ் 2018: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

கபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 41-17 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. #KabaddiMastersDubai2018

தினத்தந்தி

துபாய்,

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் பரபரப்பாக தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.

முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் கென்யா அணியை இந்தியா அணி வீழ்த்தி புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் துவக்கத்திலிருந்தே இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 18-9 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இந்திய அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் இந்திய அணி 41-17 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி, நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ள தனது அடுத்த லீக் ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்கிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை