கோப்புப்படம் 
பிற விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

யோசு,

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 15-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ செக் யுயிடம் தோற்று வெளியேறினார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 14-21, 21-18, 17-21 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் நரோகாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடம் நீடித்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-15 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹீ ஜி டிங்-சோய் ஹாவ் டோங் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-21, 4-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் நா ஹா பாக்-ஹீ சோ லீ இணையிடம் 'சரண்' அடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் கபூர்-சிக்கி ரெட்டி கூட்டணி 15-21, 12-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜீ யான் பெங்-பிங் டோங் ஹூயாங் ஜோடியிடம் தோற்று நடையை கட்டியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை