HS Prannoy (image courtesy: BAI Media via ANI)  
பிற விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ரஜாவத் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.

யோசு,

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-17 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்ஜியை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 21-15, 21-19 என்ற செட்டில் தென்கொரியாவின் சோய் ஜி ஹோனை தோற்கடித்தார்.

அதே சமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 22-24, 17-21 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். அவரிடம் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சந்தித்த 12-வது தோல்வி இதுவாகும். கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

SCROLL FOR NEXT