image courtesy; AFP 
பிற விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்; இந்திய இணை சாம்பியன்

கொரிய ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

தினத்தந்தி

யோசு ,

கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசையில் 3-வது இடத்தில் இந்திய அணி  முதல் இடத்தில் உள்ள இந்தோனேஷிய இணை உடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இந்நிலையில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 17-21,21-13 மற்றும் 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது