Image Courtesy : PTI  
பிற விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் அரையிறுதிக்கு தகுதி...!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய் மற்றும் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் பிரனாய் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார். முன்னதாக பிவி சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

அவர் அடுத்த அரையிறுதியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை