பிற விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மொத்தம் ரூ.2 கோடியே 86 லட்சம் பரிசுத்தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 19-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை சந்தித்தார்.

34 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-10, 21-15 என்ற நேர்செட்டில் அயா ஒஹோரியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஒஹோரியை, சிந்து தொடர்ச்சியாக 9-வது முறையாக தோற்கடித்தார். கால்இறுதியில் சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ யிங்கை (சீன தைபே) சந்திக்கிறார். இதுவரை இருவரும் 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். இதில் தாய் ஜூ யிங் 11 முறையும், சிந்து 5 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு