பிற விளையாட்டு

மோட்டார் சைக்கிள் பந்தயம்: சென்னை வீரர்கள் சாம்பியன்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், சென்னை வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.


சென்னை,

சென்னையை அடுத்த இருங்காட்டுகோட்டையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நேற்று நடந்தது. இதில் ஹோண்டா சி.பி.ஆர்.250 பிரிவில் சென்னை ஜோடியான அரவிந்த் பாலசுப்பிரமணியம், கெவின் கண்ணா ஆகியோர் வெற்றி பெற்றனர். அபிஷேக்- அனிஷ் ஷெட்டி இணை 2-வது இடத்தை பிடித்தது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அரவிந்த்-கெவின் கூட்டணி வசப்படுத்தியது.

SCROLL FOR NEXT