பிற விளையாட்டு

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணிகள் கால்இறுதிக்கு தகுதி

தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதி சுற்றுக்கு தமிழக அணிகள் தகுதி பெற்றன.

தினத்தந்தி

சென்னை,

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 87-63 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது.

லீக் சுற்று முடிவில் இந்தியன் ரெயில்வே, அசாம், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை (மாலை 4 மணி) சந்திக்கிறது.

அதே சமயம் ஆண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 85-74 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை சாய்த்து தொடர்ச்சியாக 5-வது வெற்றியை தனதாக்கியது.

லீக் சுற்று முடிவில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட், சர்வீசஸ், இந்தியன் ரெயில்வே, கர்நாடகா, அரியானா அணிகள் கால்இறுதியை எட்டின. கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, கேரளாவை (இரவு 7.15 மணி) எதிர்கொள்கிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு