பிற விளையாட்டு

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரனீத் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாய் பிரனீத் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

ஆக்லாந்து,

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத் 21-7, 21-9 என்ற நேர்செட்டில் இலங்கை வீரர் நிலுகா கருணாரத்னேவை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியை பெற அவருக்கு 29 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 19-21, 9-21 என்ற நேர்செட்டில் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 40 நிமிடம் நீடித்தது. ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சுமித் ரெட்டி-மனு அட்ரி இணை 10-21, 15-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் போடின் இசரா-நிபித்பொன் ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு