கோப்புப்படம் 
பிற விளையாட்டு

ஜாம்பவான்கள் செஸ் போட்டி: ஆனந்தை வீழ்த்தி காஸ்பரோவ் ‘சாம்பியன்’

விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது

தினத்தந்தி

செயின்ட் லூயிஸ்,

முன்னாள் உலக செஸ் சாம்பியன்களான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. இதில் இருவரும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் முறையில் தலா 6 முறை மோதினர். ஒவ்வொரு நாளும் ரேபிட், பிளிட்ஸ் வடிவில் தலா இரு ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் முதல் 2 நாள் ஆட்டங்கள் முடிவில் காஸ்பரோவ் 8-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார்.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த ரேபிட் பிரிவின் முதலாவது ஆட்டம் 61-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டத்தில் காஸ்பரோவ் 40-வது நகர்த்தலில் ஆனந்தை தோற்கடித்தார். இதன் மூலம் 2 ஆட்டம் எஞ்சி இருந்த நிலையில் காஸ்பரோவ் சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்தார்.

இதையடுத்து நடந்த பிளிட்ஸ் பிரிவில் முதலாவது ஆட்டத்தில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் 27-வது நகர்த்தலில் காஸ்பரோவுக்கு பதிலடி கொடுத்தார். இதன் 2-வது ஆட்டத்திலும் ஆனந்த் வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் காஸ்பரோவ் 13-11 என்ற புள்ளி கணக்கில் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வாகை சூடிய காஸ்பரோவுக்கு ரூ.69 லட்சமும், ஆனந்துக்கு ரூ.58 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை