கோப்புப்படம் 
பிற விளையாட்டு

புரோ கபடி: எலிமினேட்டர் சுற்றில் யுபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் நாளை மோதல்

மற்றொரு சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன.

தினத்தந்தி

பெங்களூர்,

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. தமிழ் தலைவாஸ் 47 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. எலிமினேட்டர் 2 சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி அணியுடன் மோதவுள்ளன.

இறுதிப்போட்டியானது வரும் 25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து