பிற விளையாட்டு

புரோ கபடி இறுதிப்போட்டி: புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி ’சாம்பியன்’

சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. இதில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் சந்தித்தன.

ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி அணி 20 புள்ளிகளும், புனே அணி 14 புள்ளிகளும் எடுத்திருந்தன. முதல் பாதி முடிவில் புனே அணி 6 புள்ளிகள் பின் தங்கி இருந்தாலும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி டெல்லி அணிக்கு சவால் அளித்தது. ஆனால் ஆட்டத்தில் இறுதியில் அந்த அணியால் முன்னிலை பெற முடியவில்லை.

இறுதியில் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் தபாங் டெல்லி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெற்ற புனே அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து