பிற விளையாட்டு

புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு அரியானா முன்னேற்றம்

புரோ கபடி போட்டியின் அடுத்த சுற்றுக்கு அரியானா அணி முன்னேறியது.

தினத்தந்தி

பஞ்ச்குலா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த 113-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 60-40 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது தோல்வியை சந்தித்த புனே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. மற்றொரு ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட அரியானா ஸ்டீலர்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வென்றது. 19-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா 12 வெற்றி, 6 தோல்வி, ஒரு சமன் என்று 65 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது. ஏற்கனவே டெல்லி, பெங்கால் அணிகளும் அடுத்த சுற்றை எட்டி விட்டன.

இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்-மும்பை (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு