Image Courtesy: @ProKabaddi  
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ்

இன்று நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

ஜெய்ப்பூர்,

புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் (இரவு 8 மணி) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் 28-23 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்