Image Courtesy: @ProKabaddi  
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அரையிறுதிக்கு தகுதி

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கியது.

தினத்தந்தி

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92), தபாங் டெல்லி (79), குஜராத் ஜெயன்ட்ஸ் (70), அரியானா ஸ்டீலர்ஸ் (70), பாட்னா பைரேட்ஸ் (69) ஆகிய அணிகள் முறையே முதல் 6 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் இந்த தொடரில் பிளே - ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 37-35 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு