பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் தோல்வி

புரோ கபடி லீக் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது.

சோனிபட்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்கால் வாரியர்ஸ் அணி 30-25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றது.

அதே சமயம் 3-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- தமிழ்தலைவாஸ் (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்- யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்