பெங்களூரு,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. யோத்தா மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ்அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 38-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-26 என்ற புள்ளி கணக்கில் மும்பையையும், பெங்களூரு புல்ஸ் 45-37 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சையும் வென்றது.
இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 7.30 மணி), தபாங் டெல்லி-உ.பி. யோத்தா (இரவு 8.30 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்-புனேரி பால்டன் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.