பிற விளையாட்டு

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே

புரோ கபடி போட்டியில், தெலுங்கு டைட்டன்சிடம் புனே அணி தோல்வியடைந்தது.

மும்பை,

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 60-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. 20 முறை ரைடுக்கு சென்று 8 புள்ளிகள் எடுத்த டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரி, தங்களது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை அணி) அணி 41-24 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது.

மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு