பிற விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

* இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 41 முறை சாம்பியனான மும்பை அணி தனது முதலாவது லீக்கில் பரோடோவை வருகிற 9-ந்தேதி வதோதராவில் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாத சமயங்களில் தவால் குல்கர்னி கேப்டனாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டிகள் இல்லாததால் அஜிங்யா ரஹானே மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல் ஊக்கமருந்து சர்ச்சையால் 8 மாதங்கள் தடையை அனுபவித்த இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கும் இடம் கிடைத்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்