கிரனடா,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முத லில் தகுதி சுற்று நடந்தது. இதில் பங்கேற்ற 42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதிசுற்றுக்கு முன்னேறினர்.
தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற இந்தியாவின் இளம் நட்சத்திரங் கள் பலாக்- முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளி களுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது. சீனாவின் கியான்ஸன் யாவ்- காய் ஹூ ஜோடி வெள்ளிப்பதக்கத்தையும் (484.8 புள்ளி), ஹங்கேரியின் வெரோ னிகா மேஜர்- அகோஸ் கரோலி இணை வெண்கலப்பதக்கமும் (414.9 புள்ளி) கைப்பற்றியது.