சென்னை,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-19, 21-18 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியூங் ஜே கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜார் அல்பியான்-முகமது ஷோஹிபுல் பிக்ரிஇணையை சந்திக்கிறது.