சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென் கொரிய வீராங்கனை அன் சே யங் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 17-21, 14-21 என்ற செட் கணக்கில் அன் சே யங்கிடம் தோல்வியடைந்தார். அன் சே யங் அரையிறுதிக்கு முன்னேறினார்.