பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சமீர் வர்மா காலிறுதிக்கு தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா காலிறுதிக்கு இன்று முன்னேறியுள்ளார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் பாங்காக் நகரில் நடந்து வருகின்றன. இதில், போட்டி ஒன்றில் 26 வயதுடைய இந்திய வீரர் சமீர் வர்மா மற்றும் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோர் விளையாடினர்.

39 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-12, 12-9 என்ற செட் கணக்கில் சமீர் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இன்று நடைபெறும் போட்டி ஒன்றில் மலேசிய வீராங்கனை கிசோனா செல்வதுரையை எதிர்த்து விளையாடுகிறார். இந்தியாவின் பிரனோய், மலேசியாவின் டேரன் லியூவை எதிர்த்து மற்றொரு போட்டியில் இன்று விளையாட உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்