பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-9 என்ற நேர் செட்டில் ரஸ்மஸ் ஜெம்கேவை (டென்மார்க்) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 17-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லீவ் டாரனிடம் வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஆகிய இந்திய ஜோடிகளும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டு கால்இறுதியை உறுதி செய்தன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது