பிற விளையாட்டு

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்

பாரா ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என்று மொத்தம் 72 பதக்கங்கள் குவித்து அசத்தியது.

இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக நடந்த பாராட்டு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு முறையே மத்திய அரசின் சார்பில் ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்