பாங்காக்,
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் அரைஇறுதியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
1949-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தென் கொரியா 3-2 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.