பிற விளையாட்டு

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரமோத் இறுதிபோட்டிக்கு தகுதி

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறினார்.

தினத்தந்தி

டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாராஒலிம்பிக் ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறினார்.

ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையரில் எஸ்.எல்.3 பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் (குரூப்ஏ) நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட்டில் ஜப்பான் வீரர் டைசுகி புஜிகராவை வீழ்த்தினார். இதன் மூலம் பிரமோத் பகத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

இறுதிபோட்டியில் பிரமோத் பகத் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரமோத் பகத் பெற்றுள்ளார். 33 வயதான பிரமோத் இடது கால் பாதிப்புக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு