பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகாத் ஜரீனுக்கு கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்..!

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகாத் ஜரீனுக்கு கார் பரிசு வழங்கி மஹிந்திரா நிறுவனம் கவுரவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற உலக பெண்கள் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு பரிசு வழங்குவோம் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது புதிய தார் எஸ்யூவி வகை காரை இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு தங்கள் பிரபலமான கார்களை வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்