பிற விளையாட்டு

தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா ஆட்டம் ‘டை’

தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா இடையிலான ஆட்டம் சமன் ஆனது.

பஞ்ச்குலா,

6-வது புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. தலைவாஸ் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் உ.பி. வீரர் பிரசாந்த் குமார் ராய் ரைடு மூலம் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பிரசாந்த் குமார் மொத்தம் 12 புள்ளிகள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பி பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 12 தோல்வி, 3 டை என்று 38 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை