பிற விளையாட்டு

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கைப்பந்து அணியினருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி


சென்னை,

மியான்மரில் கடந்த வாரம் நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 1-3 என்ற செட் கணக்கில் சீன தைபேயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றது. வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்பட 17 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் அறிவித்துள்ளார். விரைவில் பாராட்டு விழா நடத்தி இந்திய அணியினருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராமவ்தார் சிங் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து