ஒன்டாரியோ,
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் அனஹத் சிங் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் எகிப்தின் பார்ப் சமேயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது கடந்த 21 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2005-ம் ஆண்டில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.