இத்தாலி,
ஐஎஸ்எஸ்எப் (ISSF) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் யுகன் சக்திவேல் முத்துக்குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இத்தாலியில் ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டிராப் ஆண்கள் ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. 15 வயதான இந்திய வீரர் யுகன் சக்திவேல் முத்துக்குமார் இதில் பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் யுகன் 27 இலக்குகளை துல்லியமாக சுட்டு முதலிடம் பிடித்தார்.
இத்தாலி வீரர் பிரான்சிஸ்கோ டான்போக்லியோ 26 இலக்குகளை தாக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரை விட ஒரு புள்ளி அதிகமாக பெற்ற யுகன், 27 இலக்குகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இத்தாலி வீரரான சிமோன் ரோன்சென் 21 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
முதல் 5 இடங்களை பிடித்த வீரர்கள்:
1. யுகன் சக்திவேல் முத்துக்குமார் (இந்தியா) - 27
2. பிரான்சிஸ்கோ டான்போக்லியோ (இத்தாலி) - 26
3. சிமோன் ரோன்சென் (இத்தாலி) - 21
4. ஜோஸ் பாரெரோ (ஸ்பெயின்) - 15
5. ஆண்ட்ரியா டயானா (இத்தாலி) - 11
15 வயதிலேயே ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்று யுகன் சக்திவேல் முத்துக்குமார் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.