image courtesy: AFP 
டென்னிஸ்

ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு

33-வது ஒலிம்பிக் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.

தினத்தந்தி

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் டென்னிஸ் போட்டிகளில் முன்னணி வீரரான ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆண்டி முர்ரே, பாரீஸ் ஒலிம்பிக் தொடருடன் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எனது கடைசி டென்னிஸ் போட்டிக்காக பாரீஸ் வந்துள்ளேன். நாட்டிற்காக போட்டியிட்டது எனது வாழ்க்கையின் மறக்கமுடியாத வாரங்களாகும், கடைசியாக அதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

ஆண்டி முர்ரே ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்