டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஹோல்கர் ரூனே

ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அல்காரசை வீழ்த்தி ஹோல்கர் ரூனே வெற்றி பெற்றார்.

தினத்தந்தி

பார்சிலோனா,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ், 13-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) சந்தித்தார்.

1 மணி 40 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஹோல்கர் ருனே 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்டில் அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை சொந்தமாக்கினார். அவருக்கு இது 5-வது சர்வதேச பட்டம். அதே சமயம் 500 தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய போட்டியில் ருனே மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும்.

அவருக்கு ரூ.5 கோடியும், 2-வது இடம்பிடித்த அல்காரசுக்கு ரூ.2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தோல்வியின் மூலம் அல்காரஸ் இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ஒரு இடம் குறைந்து 3-வது இடத்துக்கு தள்ளப்படுகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்