Image Courtesy: AFP 
டென்னிஸ்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்- மெத்வதேவ் வெளியேற்றம்

உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தினத்தந்தி

பாரிஸ்,

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று போட்டிகள் பாரிஸில் கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் ரவுண்டு ஆப் 62 சுற்று போட்டிகள் தொடங்கியது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு ரவுண்டு ஆப் 32 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினௌர், 6-4, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான மெட்வெடேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு