டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

இந்த வெற்றியின் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக்கொண்டது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றிருந்த இந்தியா முதல் நாளில் பிரமாதப்படுத்தியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார், ஸ்ரீராம் பாலாஜி இருவரும் வெற்றியை தேடித்தந்தனர். இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் நாளில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- சகெத் மைனெனி ஜோடி, பாகிஸ்தானின் முஜாமில் முர்தசா- அகீல் கான் இணையை எதிர்கொண்டது. பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி- மைனெனி கூட்டணி 6-2, 7-6 என்ற நேர் செட்டில் முர்தசா இணையை தோற்கடித்து தொடரையும் வென்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் புதுமுக வீரர் நிக்கி பூனச்சா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் முகமது சோயிப்பை வீழ்த்தி அசத்தினார். 5-வது ஆட்டம் நடத்தப்படவில்லை.

முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக்கொண்டது. இதற்கு முன்பு மோதிய 7 முறையும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்