டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா கால்இறுதிக்கு தகுதி

கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 7-5, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹலெப் (ருமேனியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள சிலி வீரர் கிறிஸ்டியன் காரின் சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 2-6, 5-7, 7-6 (7-3), 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருக்கு அதிர்ச்சி அளித்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்தடவையாக கால்இறுதியை எட்டினார். திரில்லிங்கான இந்த ஆட்டம் 4 மணி 34 நிமிடங்கள் நீடித்தது. மற்ற ஆட்டங்களில் நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 'வைல்டு கார்டு' வாய்ப்பு மூலம் பங்கேற்ற டிம் வான் ரிஜ்தோவெனை (நெதர்லாந்து) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னெரை சந்திக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-மேட் பாவிக் (குரோஷியா) ஜோடி, இவான் டோடிக் (குரோஷிய)-லாதிஷா சான் (சீன தைபே) இணையை சந்திக்க இருந்தது. காயம் காரணமாக இவான் டோடிக்-லாதிஷா சான் ஜோடி விலகியதை அடுத்து சானியா மிர்சா-மேட் பாவிக் இணை கால்இறுதிக்குள் நுழைந்தது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்