டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜிடன்செக், அனஸ்டசியா

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீசில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

பாரீஸ்,

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 85-வது இடம் வகிக்கும் தமரா ஜிடன்செக் (சுலோவேனியா) 7-5, 4-6, 8-6 என்ற செட் கணக்கில் 35-ம் நிலை வீராங்கனை பாலா படோசாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சுலோவேனியா நாட்டவர் ஒருவர் அரைஇறுதியை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 32-ம் நிலை வீராங்கனையான அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) 6-7 (2-7), 6-2, 9-7 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) பாராடி வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். திரிலிங்கான இந்த ஆட்டம் 2 மணி 33 நிமிடங்கள் நீடித்தது. கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ள 29 வயதான அனஸ்டசியா பாவ்லிசென்கோவா அடுத்து 23 வயதான ஜிடன்செக்குடன் மோதுகிறார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் மார்டா கோஸ்டியுக்கை (உக்ரைன்) சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு தொடரில் டாப்-10 இடத்திற்குள் எஞ்சியுள்ள ஒரே வீராங்கனையான 20 வயதான ஸ்வியாடெக் அடுத்து மரியா சக்காரியை (கிரீஸ்) இன்று சந்திக்கிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு