டென்னிஸ்

‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும்’ - சானியா மிர்சா நம்பிக்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னால் பங்கேற்க முடியும் என்று சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா ஆன்லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா காரணமாக டென்னிஸ் உள்பட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் மைதானத்துக்குள் நுழையும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தை, வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானதாகும். அதேநேரத்தில் ரசிகர்கள் இன்றி தான் போட்டி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது சிறந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் அனுமதியின்றி காலியாக இருக்கும் ஸ்டேடியத்தில் விளையாட தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை பெற்ற பிறகு டென்னிஸ் போட்டிக்கு திரும்புவதற்காக 2 வருடம் நான் கடினமாக உழைத்து இருக்கிறேன். இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட நான் தயாராக இருந்தேன். அதற்கு தயாராக இல்லையெனில் நான் களம் திரும்பி இருக்க வேண்டிய அவசியமில்லையே?. சொல்லப்போனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போனது எனக்கு லேசான பின்னடைவு தான். ஏனெனில் அடுத்த ஆண்டு எனக்கு மேலும் ஒரு வயது அதிகரித்து விடும். இருப்பினும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் விளையாட முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு