கோப்புப்படம்  
டென்னிஸ்

ஐ.டி.எப். டென்னிஸ்: அங்கிதா போராடி தோல்வி

புருவிர்தோவா 0-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அங்கிதாவை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார்.

பெங்களூரு,

ஐ.டி.எப். பெண்கள் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 241-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 163-வது இடத்தில் உள்ள பிரன்டா புருவிர்தோவாவுடன் (செக்குடியரசு) மோதினார்.

இதில் முதல் செட்டில் எதிராளியின் தவறுகளை சரியாக பயன்படுத்தி ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் கைப்பற்றிய அங்கிதா 2-வது செட்டிலும் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி கண்ட புருவிர்தோவா அந்த செட்டை தனதாக்கியதுடன், கடைசி செட்டையும் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

முடிவில் புருவிர்தோவா 0-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அங்கிதாவை தோற்கடித்து கோப்பையை தட்டிச் சென்றார். 15 வயதான பிரன்டா புருவிர்தோவா, சென்னை ஓபனில் மகுடம் சூடிய லிண்டா புருவிர்தோவாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு