டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா

இத்தாலி ஓபன் டென்னிஸின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்விடோலினா ஆகியோர் நுழைந்தனர்.

தினத்தந்தி

ரோம்,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிசுற்றுக்குள் நுழைந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து