டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ரைபகினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ரைபகினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

இத்தாலி,

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைபகினா 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் ஜாஸ்மினை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை அனஸ்தசியா பொடாபோவா, சக நாட்டு வீராங்கனையான வெரோனிகா குடர்மெட்டோவாவுடன் மோதினார். இந்த போட்டியில் குடர்மெட்டோவா 7-5, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அனஸ்தசியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்