image courtesy:AFP 
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை - ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட போபண்ணா இணை 6-7 (4-7), 5-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்